search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் வீரராகவராவ்"

    தேர்தல் முடிவுகளை அறிவிக்க 30 மணி நேரம் தேவைப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற்றது.

    வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக் கூடிய எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான ராமநாதபுரம் அண்ணா பல்லைக்கழக பொறியியல் கல்லூரியில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன.

    இந்த மையத்திற்கு காவல்துறை, தமிழ்நாடு காவல்துறை சிறப்புப்பிரிவு, ஆயுதம் ஏந்திய துணை ராணுவ படை வீரர்கள் என மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    வருகிற 23-ந்தேதி வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வீரராகவ ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    பின்னர் கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:-

    வாக்கு எண்ணிக்கையின் போது முதலாவதாக தபால் வாக்குகள், அதன் தொடர்ச்சியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் என முறையே வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளுக்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மேசையிலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், உதவியாளர் என 3 அலுவலர்கள் வீதம் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ஓட்டு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 5 விவி பேட் எந்திரங்கள் வேட்பாளர் பெயருடன், சின்னத்தை பதிவு செய்துள்ள எந்திரத்தில் உள்ள வாக்காளர் உறுதி சீட்டுகளையும் எண்ண திட்டமிடப்பட்டுள்ளது.

    ஒரு விவி பேட்டில் உள்ள சீட்டுகளை எண்ணி முடிக்க இரண்டு மணி நேரம் ஆகும் என்பதால் ஒரு சுற்று முடிந்த பின் அதை உறுதிப்படுத்திய பிறகே அடுத்த சுற்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். இதனால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க 30 மணி நேரத்திற்கு கூடுதலாக அவகாசம் தேவைப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் வருகிற 31-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க 1.1.2019 தகுதியேற் படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் முதலியவற்றுக்கான படிவங்கள் 1.9.2018 முதல் 31.10.2018 வரை பெறப்பட்டன.

    முன்பு அறிவித்த, நீட்டித்த கால அட்டவணையின்படி, இறுதி வாக்காளர் பட்டியல்கள் 21.1.2019 அன்று வெளியிடப்பட்டிருக்க வேண்டும். பிழைகளற்ற வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சேர்த்தல், நீக்கல் குறித்த தகவல்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளுவதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் 2 கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    இதன் தொடர் நடவடிக்கையாக வாக்காளர் பட்டியல்களில் காணப்படும் தவறுகள், ஒன்று போலுள்ள பதிவுகள் ஆகியவற்றைக் கண்டறிந்து உரிய களவிசாரணை மேற்கொண்டு இரட்டைப்பதிவுகளை நீக்கி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இ.ஆர்.ஓ. நெட் மென்பொருள் மூலம் அச்சிடும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    இந்தப் பணிகளுக்கு மேலும் சிறிது கால அவகாசம் தேவைப்படுவதால், இறுதி வாக்காளர் பட்டியல்களை வருகிற 31-ந் தேதி வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் வருகிற 31-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் வீரராகவராவ், தெரிவித்துள்ளார்.
    டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் எதுவும் இல்லை என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டத்தில் உள்ள அக்கிரமேசி கிராமத்தில் மாவட்ட கலெக்டர் வீர ராகவராவ் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, பரமக்குடி அரசு மருத்துவ மனைக்கு நேரடியாகச் சென்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு, 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவு என ஒவ்வொரு பிரிவாக நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களி லும் பரவலாக மழை பெய்து வருவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள சூழ்நிலையினாலும் அனைத்து மாவட்டங்களிலும் பருவ மழை காலத்தில் ஏற்படக் கூடிய டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் பரவா மல் தடுப்பதற்கான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல் அமைச் சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களின் ஒருங்கிணைப்பில் பாது காப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் 11 அரசு மருத்துவமனைகள், 58 அரசு ஆரம்ப சுகாதார நிலையங் கள் அனைத்திலும் காய்ச் சலுக்கான சிறப்பு பிரிவு செயல்படுத்தப்பட்டு, தனிக்கவனம் செலுத்தப் பட்டு சிகிச்சை வழங்குவ தோடு தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம் மாவட் டத்தில் தற்போது வரை டெங்கு வைரஸ் காய்ச் சல், பன்றிக்காய்ச்சல் போன்ற நோய் பாதிப்பு கள் ஏதுமில்லை. இருப்பி னும் இத்தகைய வைரஸ் காய்ச்சல்களை பரவா மல் தடுப்பதற்கான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆய்வின் போது மருத்துவப்பணிகளின் இணை இயக்குநர் டாக்டர் முல்லைக்கொடி, இணை இயக்குநர் பொது சுகாதாரத் துறை, சென்னை (மாவட்ட பொறுப்பு அலுவலர்) டாக்டர் சோமசுந்தரம், துணை இயக்குநர் (பரமக் குடி) டாக்டர் மீனாட்சி, பரமக்குடி அரசு மருத்துவ மனை தலைமை மருத்துவர் டாக்டர் நாகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்து வர்கள் உடனிருந்தனர். #tamilnews
    ×